தொடர்புடைய செய்திகள்
- பாஜக எனக்கு 500 கோடி ரூபாய் தருவதாக சொன்னார்கள்: சீமான் அதிர்ச்சி தகவல்..!
- கச்சத்தீவு எங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கும்: இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான்
- "எல்லை மீறக் கூடாது" - குர்பத்வந்த் சிங் வழக்கில் இந்தியா பற்றி அமெரிக்க தூதர் என்ன கூறினார்?
- பயத்தின் பிடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்..! துணிவில்லாத திமுக - காங்கிரஸ் கூட்டணி..! எல்.முருகன் சாடல்...
- அப்போ கச்சத்தீவு..! இப்போ அருணாச்சல பிரதேசம்..! சர்ச்சையை கிளப்பிய சீனா...!!
இந்த ஒரு நிபந்தனையை நிறைவேற்றினால் நாங்களே பாஜகவுக்கு வாக்கு அளிக்கிறோம்: சீமான்
கச்சத்தீவை மீட்டு கொடுத்தால் நாங்களே பாஜகவுக்கு வாக்களிக்கிறோம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக கச்சத்தீவு விவகாரம் விஸ்வரூபம் எடுத்து உள்ள நிலையில் இது குறித்து திமுக மற்றும் பாஜக இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
மேலும் கடந்த பல ஆண்டுகளாக இந்திய அரசு கச்சத்தீவை திரும்ப கேட்கவில்லை என இலங்கை அமைச்சர் தொண்டைமான் கூறியதை அடுத்து தற்போது இருக்கும் பாஜக அரசும், இதற்கு முந்தைய திமுக காங்கிரஸ் அரசும் கச்சத்தீவை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கச்சத்தீவை மீட்போம் என அடிக்கடி பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் நேரத்தில் மட்டும்தான் பாஜகவுக்கு கச்சத்தீவு ஞாபகம் வருகிறது என்றும், தேர்தலுக்குள் கச்சத்தீவை மீட்டு கொடுங்கள் நாங்களே பாஜகவுக்கு வாக்களிக்கிறோம், எனக்கு வாக்களிக்கவிட்டாலும் பரவாயில்லை கச்சத்தீவை மீட்டுக் கொடுத்தால் நானே பாஜகவுக்கு வாக்களிக்கிறேன் என்றும் சீமான் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
