1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Seeman has challenged DMK and AIADMK

திமுக, அதிமுகவுக்கு சாவல் விடுத்துள்ள சீமான்

seeman
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாராத்தின் மேற்கொண்டுள்ளனர்.

சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது கட்சி சார்பில் 35 வேட்பாளர்களை அறிவித்தார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடும் எனத் தெரிவித்து, திமுக, அதிமுக தனித்துப் போட்டியிடுமா எனச் சவால் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் மாற்றம் கொண்டுவர 10 ஆண்டுகளாகப் போராடிவருகிறோம்.கடந்த மக்களவைத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு மக்கள் 10 லட்சம் ஓட்டுகள் போட்டுள்ளனர்.வரும் சட்டமன்றத்தேர்தலில் மக்களை நம்பி போட்டியிடுகிறோம்.

 நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடும் . இதேபோல்  திமுக, அதிமுக தனித்துப் போட்டியிடுவார்களா எனச் சவால் விடுத்துள்ளார்.

தனது கட்சி சார்பில் 35 வேட்பாளர்களை நியமித்த சீமான், தனது முடிவுக்கு எதிராக யார் பேசினாலும் தனது கட்சித் தொண்டர்களை கிரீஸ் டப்பாவை மிதிப்பதுபோல் மிதிப்பதாக எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
டெல்லி விவசாயிகள் போராட்டம்: குடியரசு நாள் டிராக்டர் பேரணி வன்முறைக்கு பின் போராடும் விவசாயிகளுக்கு உள்ள சவால்கள்