தொடர்புடைய செய்திகள்
- பட்டாசு தொழிலாளர்களிடம் நடிகர் சரத்குமார் வாக்கு சேகரிப்பு!
- மீண்டும் தக் லைஃப் படத்துக்குள் வரும் துல்கர் & ஜெயம் ரவி… என்னப்பா நடக்குது?
- மூன்றாம் உலகப் போருக்கு வாய்ப்பு..! போரை நிறுத்தம் திறன் மோடிக்கு உள்ளது..! அண்ணாமலை.....
- தமிழ் கலாசாரம் மோடியால் பெருமை..! மூத்த மொழி தமிழ்..! ராஜ்நாத் சிங்...
- அரவிந்த் கெஜ்ரிவால் வருகிற மாதிரி தெரியவில்லை. களத்தில் இறங்கிய மனைவி சுனிதா..!
இந்த தேர்தல் இரண்டாவது சுதந்திரப் போர்! கோவையில் கமல்ஹாசன் ஆவேசம்!
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் இரண்டாவது சுதந்திரப் போர் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவையில் பிரச்சாரம் செய்தார்.
கோவையில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த கமல்ஹாசன் வரும் பாராளுமன்ற தேர்தல் என்பது சாதாரண மற்ற தேர்தலை போல் கிடையாது என்றும் இது ஒரு இரண்டாவது சுதந்திரப் போர் என்றும் தெரிவித்தார்.
சிறையில் கஷ்டப்பட்டு செக்கிழுத்து, வாழ்விழந்து மீட்ட சுதந்திரம் வெள்ளையர்களை வெளியேற்றினாலும் அந்த தியாகம் எல்லாம் இன்று கொள்ளையர்கள் கையில் நாடு இருக்கிறது
நடக்க இருப்பது இரண்டாவது சுதந்திரப் போர், எனவே ஏப்ரல் 19ஆம் தேதி நீங்கள் சரியான முடிவு எடுத்தால், ஜூன் 4-ம் தேதி இரண்டாவது சுதந்திர நாள் என்று கோவையில் திமுக வேட்பாளர் ஆதரித்து கமல்ஹாசன் பேசினார்
திமுக கூட்டணியில் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இருந்தாலும் அந்த கட்சிக்கு ஒரு தொகுதி கூட கொடுக்கப்படவில்லை என்றும் இருப்பினும் கமல்ஹாசன் திமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
