1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: ஞாயிறு, 29 டிசம்பர் 2019 (13:58 IST)

ஜனவரி 4 ஆம் தேதி பள்ளிகளை திறக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் கோரிக்கை !

2020 ஆம் ஆண்டின் முதல் வேலைநாளை புத்துணர்வுடன் தொடங்க எற்ற சூழல் இருக்காது என ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கூறியுள்ளதாவது: நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை பணி ஜனவரி 2 ஆம் தேதி நள்ளிரவு வரை நடக்க வாய்ப்புள்ளது எனவே, ஜனவரி 3 ஆம்தேதிக்கு பதிலாக ஒரு நாள் தள்ளி ஜனவரி 4 ஆம் தேதி திறந்திட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
இந்நிலையில், பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க அரசுக்கு வலியுறுத்தி கோரிக்கை வைத்தால் இது குறித்து பரிசீலிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.