செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (19:27 IST)

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகஆள் விடுமுறை

rain
தென் மாவட்டங்கள் உள்பட ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் ஒரு சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது என்பதை ஏற்கனவே கூறினோம். 
 
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது 
 
இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அம்ரீத் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்
 
நீலகிரியில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
 
இதனை அடுத்து மேலும் சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.