1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. School students fight, bomb blast edappadi palanisamy condemn

சென்னை பள்ளி மாணவர்கள் மோதலில் வெடிகுண்டு வீச்சு.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

பள்ளி
சென்னை பள்ளி மாணவர்கள் மோதலில் வெடிகுண்டு வீச்சு சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 
 
சென்னை வேளச்சேரியில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டிருக்கிறது.
 
தமிழ்நாட்டின் தலைநகரில் பட்டப்பகலில் மாணவர்கள் மோதலில் வெடிகுண்டு வீச்சு  நடந்துள்ளது என்றால், இந்த ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதன் லட்சணம் இது! இதைவிட இந்த அரசுக்கு வேறென்ன தலைகுனிவு வேண்டும்?
 
இந்த சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதுடன், இந்த மோதலில் ஈடுபட்டோர் மாணவர்கள் தானா அல்லது வேறு ஏதும் பின்னனியில் உள்ளவர்களா என்பதை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்த விடியா அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.
 
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
115 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல்.. இரண்டு தொகுதிகளில் முதல்வர் போட்டி..!