தொடர்புடைய செய்திகள்
- வெளிமாநில தொழிலாளர்களுக்கு அனுமதி; புதிய விதிகளை வெளியிட்ட தமிழக அரசு!
- என்.ஆர்.காங்கிரஸ் பொதுச் செயலாளர் கொரோனாவுக்கு பலி: புதுச்சேரியில் பரபரப்பு
- ஊரடங்கால் வருமானவில்லை: 3 குழந்தைகளின் தாய் ஏரியில் விழுந்து தற்கொலை
- தமிழகத்திற்கு ஜி.எஸ்.டி இழப்பீடாக ரூ.12,305 கோடி வழங்கிய மத்திய அரசு
- செமஸ்டர் தேர்வு மதிப்பெண் வழங்கும் முறை அறிவிப்பு - தமிழக உயர் கல்வித்துறை
சிபிஐ அதிகாரிகளை தொடர்ந்து காவலர்களுக்கும் கொரோனா! – மதுரையில் பரபரப்பு!
சாத்தான்குளம் சம்பவத்தில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்களுக்கும் கொரோனா ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல்நிலையத்தில் தாக்கப்பட்டதால் இறந்த விவகாரத்தில் 5 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிபிஐ அதிகாரிகள் அவர்களை சில நாட்களுக்கு முன்பு காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் சமீபத்தில் சாத்தான்குளம் விசாரணைக்காக வந்த 4 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதை தொடர்ந்து மதுரையை சேர்ந்த உள்ளூர் அதிகாரியும் பாதிக்கப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர்கள் முத்துராஜ் மற்றும் முருகனுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் சாத்தான்குளம் வழக்கில் சம்பந்தப்பட்டு கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
