தொடர்புடைய செய்திகள்
- வெற்றிமாறனுக்கு நன்றி கூறிய சவுக்கு சங்கர்
- இந்தியா, பாரத் ஆகிய இரண்டு வார்த்தைகள் பற்றி ராகுல்காந்தி கருத்து
- நாடாளுமன்றக் கட்டிடத்தில் மழை நீர், G20 மண்டபத்தில் வெள்ளம்- அமைச்சர் உதயநிதி
- இடைத்தேர்தல் முடிவுகளால் பாஜகவுக்கு அச்சம்: டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்..!
- பாஜகவை தோற்கடிக்க முடியும் என்பதை இடைத்தேர்தல் நிரூபித்துவிட்டது: ப.சிதம்பரம்
மக்களவை தேர்தலுக்குள் அதிமுக ஒருங்கிணைப்பு சாத்தியமாகும்: சசிகலா நம்பிக்கை
வரும் மக்களவைத் தேர்தலுக்குள் பிரிந்து இருக்கும் அதிமுக ஒருங்கிணைக்க வாய்ப்பு இருப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
வரும் மக்களவை தேர்தலுக்குள் அதிமுக ஒருங்கிணைப்பு சாத்தியம் தான். ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தான் திமுகவினர் தேர்தலில் வாக்குறுதி அளித்தனர். ஆனால் அரசு அதிகாரிகளுக்கு மாதம் சம்பளம் வழங்கவே அரசிடம் போதுமான நிதி இல்லை அப்படி இருக்கும் பட்சத்தில் மகளிருக்கு மாதா மாதம் உரிமை தொகை வழங்குவது எந்த விதத்தில் சாத்தியமாகும்.
மேலும் தேர்தலில் வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் யாராக இருந்தாலும் அனைவரையும் சமமாக நினைக்க வேண்டும் என சசிகலா கூறினார்,.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
