தொடர்புடைய செய்திகள்
- பொன்னியின் செல்வன்: சரத்குமார், பார்த்திபன் கேரக்டர்களின் புகைப்படம் ரிலீஸ்
- ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்திட சட்டம் – கேரளா ,தமிழகத்தைப் போன்று பிற மாநிலங்கள் முன்னெடுக்குமா?
- ஒரு விளம்பரத்துக்கு அதிக சம்பளம் வாங்கும் ஆலியா பட்
- ஆவின் குடிநீர் பாட்டில்; பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரம்! – ஆவின் புதிய முயற்சி!
- அந்த மாதிரி விளம்பரத்துல நடிச்சது தப்புதான்..! – மனம் வருந்திய லால்!
தடை செய்யல.. அதை கேட்க வேண்டியதுதானே? – ரம்மி விளம்பரம் குறித்து சரத்குமார் பதில்!
ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் சரத்குமார் நடித்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளில் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் கடந்த சில காலங்களாக அதிகமாக நடந்துள்ளது. ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் சரத்குமார் நடித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. திருச்சியில் சமத்துவ மக்கள் கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு வந்த சரத்குமாரிடம் இதுகுறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அப்போது பேசிய அவர் “ஆன்லைன் ரம்மியை தடுக்க அரசு என்ன முயற்சி எடுக்கிறது என முதலில் கேளுங்கள். பிறகு சரத்குமார் விளம்பரத்தில் நடித்தது குறித்து கேட்கலாம். ஆன்லைன் சூதாட்டம் மக்களை பாதிக்கும் என்பதை முன்பிருந்தே கூறி வருகிறோம்.
ரம்மி மட்டும் ஆன்லைன் சூதாட்டம் அல்ல. கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை வைத்தும் சூதாட்ட செயலிகள் உள்ளது. அரசு எதையுமே தடுக்காமல் இருக்கும்போது சரத்குமார்தான் மக்களை கெடுக்கிறார் என்று எப்படி சொல்ல முடியும்?” என்று கேள்வி எழுப்பி பேசியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
