தொடர்புடைய செய்திகள்
- அமைச்சரும், திமுகவினரும் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடிப்பார்களா? அண்ணாமலை கேள்வி..!
- பாஜகவில் இருந்து விலகினார் ஆர்.கே.சுரேஷ்.. ஐஜேகே கட்சியில் முக்கிய பதவி..!
- இடைத்தேர்தலில் காட்டும் வேகத்தை நிவாரண பணிகளில் காட்டாதது ஏன்? ஆதவ் அர்ஜுனா கேள்வி
- இன்று முதல் பால், தயிர் விலை உயர்வு!! ஒரு லிட்டருக்கு எவ்வளவு உயர்ந்தது?
- மீண்டும் 14 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு.. இலங்கை கடற்படையின் அத்துமீறல்..!
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரணம்: இன்று முதல் டோக்கன் விநியோகம்
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தருவதற்காக இன்று முதல் டோக்கன் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் தோன்றிய ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை உள்பட சில மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. வரலாறு காணாத அளவுக்கு மழை பொழிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டது.
இதை அடுத்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்ததோடு, விளை நிலங்களும் சேதம் அடைந்தது. இதனை அடுத்து, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடும்ப அட்டையை அடிப்படையாகக் கொண்டு 2000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அந்த வகையில் ஃபெஞ்சல் புயல் நிவாரணத் தொகை வழங்குவதற்கான டோக்கன் இன்று வீடுகளுக்கு நேரடியாக வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Mahendran
