வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 4 ஜூன் 2022 (23:05 IST)

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு மறுதேர்வு: பள்ளிக்கல்வித்துறை

exam
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
 
சமீபத்தில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் பல மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது
 
இந்நிலையில் இது குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர் 
 
எனவே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்காத  மாணவர்களுக்கு மீண்டும் மறு தேர்வு நடத்தப்படும் என்பது உறுதியாகி உள்ளது