1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. RB Udhyakumar comments on MK Stalin

எதுகை மோனையில் பேசி ஊரை ஏமாற்றும் ஸ்டாலின்: உதயகுமார் காட்டம்!

திமுக
திமுக தலைவர் ஸ்டாலின் எதுகை மோனையாக பேசு மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு. 
 
சமீபத்திய பேட்டியில்,பொருளாதார தேவை, மக்களின் வாழ்வாதாரத்திற்காக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தளர்வுகளை அல்லாத நாட்களை போன்ற ஒத்துழைப்பை கொடுத்தால் மட்டுமே மக்கள் பாதுகாப்புடன் வாழ முடியும். 
 
மருந்து கண்டுபிடிக்கும் வரை மக்கள்  மிக கவனத்துடன் இருக்க வேண்டும். தமிழகத்திற்கு நிதி தேவை என்கின்ற கோரிக்கையை தொடர்ந்து மத்திய அரசிடம் விலியுறுத்தி வருகிறோம் மத்திய அரசுக்கு தொடர்ந்து  அழுத்தம் கொடுத்து வருகிறோம். 
 
தமிழகத்தில் பசி என்கின்ற வார்த்தை எந்த மூலையிலும் இல்லாத அளவிற்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலக மக்களின் உயிர் பிரச்சனையில் மக்களை கை கழுவ சொன்ன அரசு மக்களை அரசு கை கழுவி விட்டது என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசுவது முறையற்றது. முக ஸ்டாலின் எதுகை மோனையாக பேசு மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார் ஸ்டாலின் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார். 
About Writer
Sugapriya Prakash