1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rajinikanth election ink issue: EC officer explained

ரஜினிக்கு மட்டும் ஏன் இந்த மாற்றம்? அறிக்கை கேட்கும் தலைமை தேர்தல் அதிகாரி!

ரஜினிகாந்த்
நேற்று தமிழகத்தில் 38 மக்களவை தொகுதியிலும் 18 சட்டமன்ற தொகுதியிலும் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது. சென்னையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரமுகர்கள் வாக்களித்தனர்
 
இந்த நிலையில் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வாக்கை சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பதிவு செய்தார். அப்போது அவரை புகைப்படம் எடுக்க ரசிகர்களும், பத்திரிகையாளர்களும் முண்டியடித்தனர். அந்த சமயத்தில்  ரஜினிக்கு தேர்தல் அதிகாரி இடது கை விரலில் மை வைப்பதற்கு பதிலாக வலது கை விரலில் மை வைத்துவிட்டார். இது பெரும் சர்ச்சையானது
 
இதுகுறித்து பேட்டியளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, 'ரஜினி ஓட்டு போட வரும்போது பத்திரிகையாளர்கள் உள்பட பெருங்கூட்டம் கூடியதால் அவசரத்தில் தேர்தல் அதிகாரி இடது கைவிரலுக்கு பதில் வலது கைவிரலில் மை வைத்திருக்கலாம். இருப்பினும் இதுகுறித்து விளக்க அறிக்கை கேட்கப்படும். அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் சிறப்பு விதியின்படி வாக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டது குறித்தும் அறிக்கை கேட்கப்படும் என்று தெரிவித்தார்.