தொடர்புடைய செய்திகள்
- கிருஷ்ணகிரியில் பதுங்கியிருக்கின்றாரா ராஜேந்திரபாலாஜி? தனிப்படைகள் விரைவு!
- ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கல்...? அதிமுகவினரிடம் விசாரணை!
- இன்றோ அல்லது நாளையோ ராஜேந்திர பாலாஜி கைது?
- ராஜேந்திர பாலாஜி மீது மேலும் 2 புகார்கள்: வழக்குப்பதிவு செய்யப்படுமா?
- ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்கு முடக்கம்: காவல்துறை அதிரடி
மதுரை ஆவினில் முறைகேடு; ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பா? – லஞ்ச ஒழிப்புதுறை விசாரணை!
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மதுரையில் ஆவின் முறைகேட்டில் ஈடுபட்டாரா என விசாரணை நடந்து வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திரபாலாஜி. அப்போது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் ரூ.3 கோடி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ராஜேந்திரபாலாஜியை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும் சாத்தூரை சேர்ந்த நபருக்கு சத்துணவில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு வழக்கு உள்ளது.
இந்நிலையில் மதுரை ஆவினிலிருந்து திருப்பதிக்கு அனுப்பபட்ட நெய்யில் மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த மோசடியில் ராஜேந்திர பாலாஜிக்கும் தொடர்புள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
