1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 18 நவம்பர் 2022 (07:42 IST)

இன்று இந்த இரண்டு மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை

Rain
இன்று 2 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இதனால் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் நிரம்பி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று தஞ்சாவூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
ஏற்கனவே வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு தோன்றியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva