தொடர்புடைய செய்திகள்
- சென்னையின் பல பகுதிகளில் திடீர் மழை.. இன்று இரவு எங்கெல்லாம் மழை பெய்யும்?
- வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. 25 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!
- 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. குடையுடன் வெளியே செல்லுங்க..!
- இன்று 10 மாவட்டங்களில் கனமழை: மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!
- இன்று 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னையில் இன்றும் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று சென்னையில் திடீரென பெய்த மழையால் பல பகுதிகளில் குளிர்ச்சியான காலநிலை நிலவியது. இந்த நிலையில், இன்றும் காலை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
காற்றின் வேக மாறுபாடு காரணமாக இந்த நான்கு மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என்பதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edited by Siva
