வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (12:34 IST)

ஐந்து பைசாக்கு லாக்கி இல்ல... சொந்த கட்சியை வாரிவிட்ட ராதாரவி!!

பாஜக ஒரு தேங்காய் மூடி கட்சி, பணம் தரும் கட்சியல்ல என ராதாரவி சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். 
 
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராதாரவி அதிமுகவில் இணைந்தார். பின்னர் அதிமுகவில் இருந்து தன்னை விலக்கிக்கொண்டு பாஜகவில் இணைந்த்துக்கொண்டார். சமீபத்தில் கல்தா என்னும் திரைப்படத்தின் விழாவில் கலந்துக்கொண்ட அவர் பின்வருமாறு பேசினார்... 
 
எதற்கெல்லாமோ போராடி 3, 4 கோடி கையெழுத்து வாங்குகிறோம். குப்பை கொட்டக் கூடாது என்று கையெழுத்து வாங்க வேண்டியதுதானே. குப்பை கொட்டுவதைச் சொல்வதால் அதிமுக அரசை திட்டுகிறார் என்று நினைக்க வேண்டாம். 
 
அரசியல்வாதிகளை நாம் தான் வளர்க்கிறோம். யார் இந்த தெருவைச் சுத்தமாக வைத்திருக்கிறார்களோ அவர்களுக்குத் தான் ஓட்டு என்று சொல்லிப் பாருங்கள். அனைத்துத் தெருக்களும் சுத்தமாக இருக்கும்.
 
ராதாரவி கட்சி மாறிவிட்டார், பணம் வாங்கிவிட்டார் என் அனைவரும் பேசுகிறார்கள். பாஜகவில் பணம் தருவார்கள் என்று சொல்லலாமா? பாஜக பணம் தரும் கட்சியா என்ன? அது ஒரு தேங்காய் மூடி கட்சி என தெரிவித்துள்ளார்.
 
தேங்காய் மூடி கட்சி என பாஜகவை அவர் விமர்சித்துள்ளது கட்சிக்குள் சர்சசையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. ஏனெனில் தேங்காய் மூடி கட்சி என்பதின் பொருள் என்னவெனில், அந்த காலத்தில் கோவிலில் நிகழ்ச்சிகள் ஏதேனும் நடந்தால் நிகழ்ச்சி நடத்தியவர்களுக்கு பணம் தராமால் தேங்காய், பழத்தை கொடுத்து அனுப்பிவிடுவார்களாம் இது போன்றது தான் பாஜக என சொல்லாமல் சொல்லியுள்ளார் ராதாரவி.