தொடர்புடைய செய்திகள்
- வாக்காளர் பட்டியலில் சசிக்கலா பெயர் நீக்கம்!? – ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு!
- தேர்தல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்; 3.50 லட்சம் பேர் பயணம்!
- தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது - பதற வைக்கும் இந்திய நிலவரம்!
- வாக்காளர் அட்டை இல்லையா? ஓட்டு போட வேறு என்ன ஆவணம் தேவை?
- சினிமாதான் நமக்கு சோறு போடுகிறது… விமர்சகர்களுக்கு சுல்தான் தயாரிப்பாளர் பதில்!
தேர்தலில் முதன்முறையாக சுகாதாரத் துறை; லாக்டவுன் கிடையாது! – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக சுகாதாரத்துறை பணியாளர்களை தேர்தல் ஆணையம் ஈடுபடுத்த உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தேர்தலும் நடைபெற உள்ளதால் பரபரப்புடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் “தமிழகத்தில் கொரோனா அச்சம் தரும் வகையில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக சுகாதாரத்துறை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ஒரு வாக்குசாவடிக்கு மாஸ்க் அணிதல், சானிட்டைசர் தெளித்தல் உள்ளிட்டவற்றிற்காக இரண்டு சுகாதார பணியாளர்கள் இருப்பார்கள். தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்படும் என்ற செய்தியில் உண்மையில்லை” என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
