தொடர்புடைய செய்திகள்
- அபராதம் செலுத்தாவிட்டால் வாரண்ட்..! – காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை!
- சசிக்கலாவை அதிமுகவிலிருந்து நீக்கியது செல்லும்! – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
- காப்பீட்டு திட்டத்தை அலட்சியப்படுத்தினால்…! – தனியார் மருத்துவமனைகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை!
- மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்கு எதிராக தீர்மானம்! – பாஜக வெளிநடப்பு!
- பீஸ்ட் படத்திற்கு கடலில் பேனர் வைத்த ரசிகர்கள்! – வைரலாகும் புகைப்படம்!
தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி… 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை! – புதுச்சேரி அரசு அறிவிப்பு!
தமிழ் புத்தாண்டை தொடர்ந்து வரும் சனிக்கிழமையையும் சேர்த்து புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 14ம் தேதி வியாழக்கிழமை அன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 15ம் தேதி கிறிஸ்தவ பண்டிகையான புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது. இந்த இரு நாட்களுக்கும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள் சனிக்கிழமையை தொடர்ந்து ஞாயிற்று கிழமை வார விடுமுறை.
எனவே இடையே உள்ள சனிக்கிழமை ஏப்ரல் 16ம் தேதியை பள்ளிகளுக்கு விடுமுறை நாளாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இதனால் ஏப்ரல் 14 முதல் 17 வரை நான்கு நாட்கள் விடுமுறை கிடைப்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
