தொடர்புடைய செய்திகள்
- சாட்டை துரைமுருகன் பாயந்தது குண்டாஸ் சட்டம்: நாம் தமிழர் கட்சியினர் கண்டனம்!
- புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகள் - காவல்துறை உத்தரவு
- குவாட்டர் வாங்கினால் சிக்கன் 65 இலவசம்! – படையெடுக்கும் மதுப்பிரியர்கள்!
- சென்னை மெரீனாவுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை: காவல்துறை அறிவிப்பு!
- தமிழ்நாடு, புதுச்சேரியில் 59% அதிக மழை பதிவு!!
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு; ஆபரேஷன் திரிசூலத்தை கையில் எடுத்த நமச்சிவாயம்!
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ஆபரேஷன் திரிசூலம் என்ற திட்டத்தை தொடங்க உள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்திய யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கி சீர்குலைந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கை பேண போதுமான காவலர்கள் இல்லை என்றும் காவலர்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் இருந்து வருகின்றது.
இந்நிலையில் புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ஆபரேஷன் திரிசூலம் என்ற என்ற திட்டத்தை புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். இதற்காக இந்த ஆண்டில் ஆயிரம் காவலர்கள் புதுச்சேரி போலீஸில் சேர்க்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ள அவர் ஜனவரி 20க்குள் 390 காவலர்களை தேர்வு செய்ய தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
