பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்.. அடித்து நொறுக்கிய மாணவர்கள்..!
சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில், பேராசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை படூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில், சஞ்சீவி ராஜ் என்பவர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கம்ப்யூட்டர் சயின்ஸ் கற்பிக்கும் பெண் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அந்த கல்லூரியில் உள்ள மாணவர்கள் அறிந்தவுடன், அந்த பேராசிரியரை சரமாரியாக தாக்கினர். சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதைத் தொடர்ந்து, கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று, குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியரை கைது செய்தனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண் பேராசிரியை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை, மாணவர்களே நேரடியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva