தொடர்புடைய செய்திகள்
- 1000 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு சூரியக் குடும்பம் இருக்காது- விஞ்ஞானி நிகர் ஷாஜி
- சூரியனை நெருங்கும் ஆதித்யா எல்-1; இறுதி சுற்றுவட்டப்பாதையில்..! – இஸ்ரோ தகவல்!
- வெற்றிகரமாக புவியின் 3வது சுற்று வட்ட பாதையில் ஆதித்யா எல்1 .. இஸ்ரோ அறிவிப்பு..!
- சூரியனுக்கு போகும் வழியில் செல்பி எடுத்த ஆதித்யா எல்-1 ! – வைரலாகும் போட்டோ!
- விக்ரம் லேண்டரின் ரோவர் எடுத்த 3டி போட்டோ -இஸ்ரோ வெளியீடு
சென்னை தனியார் நிறுவனம் ராக்கெட் ஏவ தயாராக உள்ளது: முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன்
சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ராக்கெட் ஏவ தயாராக உள்ளது என முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் உள்ள குலசேகரபட்டினத்தில் இருந்து விரைவில் ராக்கெட் ஏவப்படும் என்றும், அடுத்ததாக சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ராக்கெட் ஏவ தயாராக உள்ளது என்றும், தனியார் வருகையால் இஸ்ரோ வளர்ச்சி பாதிக்காது என்றும் தெரிவித்தார்.
மேலும் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டது என்றும், இன்னும் 400 ஏக்கர் நிலம் வரும் நவம்பர் மதத்திற்குள் ஒப்படைக்கப்பட உள்ளது என்றும், அதன்பின் கட்டுமான பணிகள் 12 மாதத்திற்குள் முடிவடையும் என்றும், கட்டுமான பணிகள் முடிவடைந்ததில் இருந்து, குலசேகரப்பட்டினத்தில் ஓராண்டுக்குள் ராக்கெட் ஏவப்படும் என்றும் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி அளித்தார்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
