1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Prisoner Ashok Kumar commits suicide by hanging

சேலம் மத்திய சிறையில் கைதி அசோக்குமார் தூக்கிட்டு தற்கொலை!

Prisoner Ashok Kumar
ஜாமின் கிடைக்காத விரக்தியில் கைதி தூக்கிட்டு தற்கொலை!
 
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 17 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தின் அடிப்படையில்  மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் அசோக்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்.  பாலியல் குற்ற செயலில் ஈடுபட்டு  போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டதால் இவரது ஜாமீன் மனு தொடர்ந்து நிராகரிக்கட்டுள்ளது. 
 
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான கைதி அசோக் குமார் விரக்தியில் அடைக்கப்பட்டிருந்த சேலம் மத்திய சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக போலீஸ் தரப்பு கூறியுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
About Writer
Papiksha Joseph
அடுத்த கட்டுரையில்
நாகலாந்தில் பெட்ரோல் வரி குறைப்பு; மற்ற மாநிலங்களில் எழும் கோரிக்கைகள்!