தொடர்புடைய செய்திகள்
- தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக சொல்லவே இல்லை: எடப்பாடி பழனிசாமி அதிரடி விளக்கம்
- 2026ல் தவெக ஆட்சி அமைக்கும் என்பது விஜய்யின் பகல் கனவு: ஜெயகுமார்
- திமுகவை எதிர்க்கும் ஒரே கட்சி அதிமுக மட்டுமே இருக்க வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்
- 3 பேருக்கு தங்க நாணயம், 300 பேருக்கு மிக்ஸி, கிரைண்டர்! - கூட்டம் சேர்க்க அதிமுகவின் பலே ப்ளான்!
- அனைத்து கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்பா? பிரேமல்தா விஜயகாந்த் தகவல்..!
ராஜ்யசபா தொகுதி இல்லை என கைவிரித்த ஈபிஎஸ்.. சத்தியம் வெல்லும் என பிரேமலதா பதிவு..!
தேமுதிகவுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி கைவிரித்ததை அடுத்து, "சத்தியம் வெல்லும்" என பிரேமலதா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா தொகுதி வழங்குவதாக அதிமுக வாக்குறுதி அளித்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், எந்தவொரு வாக்குறுதியும் வழங்கப்படவில்லை என்றும், எனவே தேமுதிகவுக்கு ராஜ்யசபா தொகுதி வழங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்கள் இதுகுறித்து பிரேமலதாவிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் எந்தவித பதிலும் சொல்லாமல் சென்றுவிட்டார். ஆனால், தனது எக்ஸ் பக்கத்தில் அவர், "சத்தியம் வெல்லும், நாளை நமதே" என பதிவு செய்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
