தொடர்புடைய செய்திகள்
- என் சம்மந்தப்படட் பிரச்சனைக்கு உதயநிதிதான் காரணம் – கு க செல்வம் குற்றச்சாட்டு!
- இனிமேல் நான் எந்த கட்சியும் கிடையாது..! – எதிர்பார்ப்பில் ஆப்பு வைத்த கு.க.செல்வம்
- போக்குவரத்தைத் தொடங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் – தொழிலாளர் கூட்டமைப்பு அறிவிப்பு!
- சிபிஐ அதிகாரிகள் என கூறி கொள்ளை; திரைப்பட ஸ்டைலில் அரங்கேறிய சம்பவம்!
- ரிசல்ட் குளறுபடிகளுக்கு தலைமையாசிரியர்கள்தான் காரணம்! - தேர்வுத்துறை பகீர் குற்றச்சாட்டு!
பாஜகவுக்கு தாவ தயாராக திமுக பிரமுகர்கள்!? – சூசகம் சொன்ன பொன்னார்!
திமுகவிலிருந்து கு.க.செல்வம் நீக்கப்பட்ட நிலையில் மேலும் பல திமுக பிரமுகர்கள் கட்சியிலிருந்து விலக உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் திமுகவிலிருந்து கு.க.செல்வம் நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தான் எந்த கட்சியும் சாராத எம்,எல்,ஏவாக இருக்க போவதாக அறிவித்துள்ள கு.க.செல்வம் தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு உதயநிதி ஸ்டாலினும் ஒரு காரணம் என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி அளித்ததில் இருந்து திமுக மூத்த உறுப்பினர்களுக்கு மரியாதை இல்லாமல் போய் விட்டதாக பாஜக பிரமுகர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பல திமுகவினர் பாஜகவில் இணைவதற்காக பேசி வருவதாக அவர் சூசகமாக தெரிவித்துள்ளதால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவின் நிலைபாடு என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கட்சி மூத்த உறுப்பினர்களுக்கு தக்க மரியாதை வழங்காத பட்சத்தில் திமுக கூடாரத்திலிருந்து பலர் வெளியேறக்கூடும் என பிற கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
