தொடர்புடைய செய்திகள்
- கன்னியாக்குமரி நாடாளுமன்ற தொகுதியில் பிரியங்கா காந்தி! – விருப்பமனு அளித்த கார்த்திக் சிதம்பரம்!
- நாடகம் பார்த்த குடும்பம்… நள்ளிரவில் வெடித்த டிவி !
- நீ என்ன பேசுற என்று எனக்கு புரியவில்லை: மக்களவையில் கார்த்திக் சிதம்பரம் ஆவேசம்!
- போதை ஏறி.. புத்தி மாறி.. தன் வீட்டுக்கே தீ வைத்த காவலர்!
- 2 தூண்களை காணவில்லை: கன்னியாகுமரி கோவிலில் பரபரப்பு!
கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 6ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது என அதிமுக அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இதனை அடுத்து சற்றுமுன் கன்னியாகுமரி தொகுதியின் பாஜக வேட்பாளராக பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போன் ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் அறிவிப்பு!
இந்த நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக பொன்ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் வெற்றி பெற்றால் மீண்டும் அவர் மத்திய அமைச்சர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு பொன்ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்றபோது மத்திய அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
