தொடர்புடைய செய்திகள்
- கொரோனா விதிகளை காற்றில் பறக்கவிட்ட அதிமுகவினர் மீது போலீசார் வழக்கு!
- இவ்வளவு பட்டும் திருந்தல.. முகக்கவசம் இல்லை; 20 நாட்களில் 11 லட்சம் வழக்கு!
- ’’காதலிக்க மாட்டாயா....?? ஒருதலைக்காதலில் மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர் ....
- விமல் நடிக்கும் புதுப்பட ஷூட்டிங் ஆரம்பம்!
- 2 வது திருமணமப் பேச்சு....கணவரைக் கொன்ற மனைவி !
மாணவி தற்கொலை விவகாரம்: பள்ளி முதல்வர் மீது வழக்குப் பதிவு
பள்ளி மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில் கோவையைச் சேர்ந்த சின்மயா பள்ளியில் முதல்வர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
சமீபத்தில் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியராகப் பணிபுரியும் மிதுன் சக்கரவர்த்தி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை சக மாணவிகளிடம் கூறிய அம்மாணவியை மிதுன் சக்ரவர்த்தி மிரட்டியுள்ளார். இதையடுத்து அம்மாணவி மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டார்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் அப்பள்ளியில் முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
மேலும், பள்ளி நிர்வாகிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் போராட்டம் தொடர்கிறது.
