1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. PMK Ramdoss thanks to cm palanisamy

வன்னியர் உள் ஒதுக்கீடு: முதல்வருக்கு ராமதாஸ் நன்றி!

பாமக
வன்னியர்களின் நீண்டகால கோரிக்கையான 10.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதா இன்று சட்டப்பேரவையில் நிறைவேறி உள்ளது என்பது தெரிந்ததே. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வன்னியர்களுக்கு என்பது குறித்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து பாமகவினர் இந்த வெற்றியை இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர் இந்த நிலையில் தன்னுடைய கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி என்று பாமக தலைவர் ராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
இது குறித்து அவர் தொலைபேசியில் முதல்வரை தொடர்பு கொண்டு நன்றி தெரிவிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. வன்னியர்களுக்கு 10.6 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி என்றும் 40 ஆண்டுகால கனவு நிறைவேறியதில் மிக்க மகிழ்ச்சி என்றும் ஆனந்த கண்ணீரால் நனைகிறேன் என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
கூட்டணியா? தனித்து போட்டியா? கமல்ஹாசன் அறிவிப்பு!