1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Saloon employees announced a protest

முடிதிருத்தும் தொழிலாளர்கள் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம்!

முடி திருத்தம்
தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவச் சமூகத்தைச் சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளர்கள் உள் இட ஒதுக்கீடு கேட்டு இன்று போராட்டம் செய்து வருகின்றனர்.

மருத்துவர் சமூகத்தைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளர்கள் தங்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 5 சதவீத உள்ஒதுக்கீடும், சட்டப் பாதுகாப்பும் வழங்கக் கோரி இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் செய்துள்ளனர். அதனால் இன்று தமிழகம் முழுவதும் காலை 9 மணி முதல் 5 மணி வரை முடிதிருத்தும் தொழிலாளர்கள் சலூன் கடைகளை மூடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சமூகத்தி உள்ள 40 லட்சம் மக்கள் கடந்த பல ஆண்டுகளாக எந்த சலுகைகளும் இல்லாமல் போராடி வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
பல்வேறு துயரச் சம்பவங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் - முதல்வர் உத்தரவு!