வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 22 ஏப்ரல் 2020 (19:49 IST)

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசிக்க உள்ளதாக தகவல்

இந்தியாவில் 20,471  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 652 பேர் கொரொனாவால் உயிரிழந்துள்ளனர். 3,960 பேர் குணமடைந்துள்ளனர். ஒவ்வொரு மாநிலம் அரசும் கொரோனாவைக் கட்டுப்படுத்த உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க வரும் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில்,  ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஏப்.27ஆம் தேதி அனைத்து மாநில முதல்வரகளுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை மாநிலங்களில் எடுக்கப்பட்டுவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிவார் என தகவல்கள் வெளியாகிறது.