1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Perarivaalan went back to jail after completing parole

பரோல் முடிந்து மீண்டும் சிறை திரும்பும் பேரறிவாளன் !

பேரறிவாளன்
பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட சிறைதண்டனை இன்றோடு முடிந்துள்ள நிலையில் இன்று அவர் மீண்டும் சிறைக்குத் திரும்பியுள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேரில் பேரறிவாளனும் ஒருவர். அவரை விடுதலை செய்ய அவரது தாயார் அற்புதம் அம்மாள் 28 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறார். தந்தையின் உடல் நிலையை காரணம் காட்டி தனக்கு ஒரு மாதம் பரோல் வழங்குமாறு சிறைத்துறை அதிகாரிகளிடம் பேரறிவாளன் விண்ணப்பித்திருந்த நிலையில் அந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்த சிறைத்துறை அதிகாரிகள் பேரறிவாளனுக்கு இரண்டு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.

இதனையடுத்து அவர் சிறைத்துறை நடவடிக்கைகள் முடிந்து நவம்பர் 12 ஆம் தேதி வெளியானார். இன்றோடு அவர் பரோல் காலம் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் சிறைக்குத் திரும்பியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
இந்தியா என்றால் இந்துக்கள் நாடுதான் – பிரேமலதா விஜயகாந்தின் சர்ச்சைப் பேச்சு !