தொடர்புடைய செய்திகள்
- திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கும்பலின் தலைவன் கைது..!
- திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: ஹரியானாவில் முக்கிய குற்றவாளி கைது..!
- தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
- 3 நாட்களில் ஏ.டி.எம். கொள்ளையர்கள் பிடிபடுவார்கள் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் பேட்டி
- ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்தவர்கள் வட இந்தியர்களா? அரியானா விரையும் போலீஸ்..!
பெரம்பூர் நகைக்கடை கொள்ளைக்கும் ஏடிஎம் கொள்ளைக்கும் சம்பந்தமா?
பெரம்பூர் நகைக்கடை கொள்ளைக்கும் ஏடிஎம் கொள்ளைக்கும் சம்பந்தம் இருக்கின்றதா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ தங்கம் கொள்ளை தொடர்பாக புதிய புகைப்படங்கள் கிடைத்துள்ள நிலையில், கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
நகைக்கடையில் கொள்ளையடித்த பின்பு தப்பிச்சென்ற இடங்கள் தொடர்பான விவரங்களும் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தகவல் வெளியகையுள்ளது.
மேலும் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இதனுடன் தொடர்பு உள்ளதா? என்பதை அறிய திருவண்ணாமலைக்கு சென்னை போலீசார் விரைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Edited by Siva
