தொடர்புடைய செய்திகள்
- எம்பிஏ, எம்.டெக் படிப்புகளுக்கான தேர்வு: விண்ணப்பம் செய்யும் தேதி அறிவிப்பு..!
- செய்தி சேனலான Lokshahi-ன் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்த மத்திய அரசு!
- ஜெய் ஆகாஷை ஏமாற்றிவிட்டு பிரபல நடிகரின் மனைவியான பெண்… பயில்வான் சொன்ன கிசுகிசு!
- சிவில் பிரச்சினைகளில் தலையிடக்கூடாது! மீறினால் நடவடிக்கை பாயும்.!! போலீஸாருக்கு ஏடிஜிபி அருண் உத்தரவு..!!!
- ஏழு ஜென்ம பாவங்களை போக்கும் ஸ்ரீவாஞ்சியம் திருக்கோவில்!
ரூ.6000 நிவாரணம் இன்னும் கிடைக்கவில்லை: திமுக எம்.எல்.ஏவை முற்றுகையிட்ட பொதுமக்கள்..!
ரூபாய் 6000 நிவாரணம் இன்னும் கிடைக்கவில்லை என ஒட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவை துப்பாஸ்பட்டி என்ற கிராம மக்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மழை வெள்ள பாதிப்பு குறித்து சேதமடைந்த வீடுகளை ஆய்வு செய்ய எம்எல்ஏ சண்முகையா துப்பாஸ்பட்டி என்ற கிராமத்திற்கு வந்தார். அப்போது அவர்கள் தங்களுடைய கிராமத்தில் உள்ள யாருக்கும் 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கவில்லை என்றும் தங்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனை அடுத்து பொதுமக்களுடன் எம்எல்ஏ பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த நிலையில் திடீரென எம்எல்ஏ வை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து போலீசார் பொதுமக்களை கலைத்து எம்எல்ஏவை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran
