1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 30 ஜனவரி 2022 (12:58 IST)

சென்னை மெரீனாவில் பொதுமக்கள் அனுமதி எப்போது? மாநகராட்சி அறிவிப்பு!

கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை மெரினா கடற்கரை உள்பட எந்த கடற்கரைக்கும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது 
 
ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு ரத்து உள்பட பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கடற்கரைக்கும் அனுமதி அளிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது 
 
பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் சென்னை மெரினா கடற்கரை உள்பட அனைத்து கடற்கரைக்கும் பொதுமக்கள் செல்லலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவேளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கடற்கரையில் கூட்டம் கூட கூடாது என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.