1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 19 அக்டோபர் 2021 (15:33 IST)

தமிழகத்தின் 10 மாவட்டங்களுக்கு Orange Alert!

தமிழகத்தில், வரும் 21 ஆம் தேதி 6 மாவட்டங்களுக்கும், 22 ஆம் தேதி 4 மாவட்டங்களுக்கும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. 

 
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்து வந்த நிலையில், தற்போது வங்க கடல் மற்றும் அரபிக்கடலில் இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மேலும் சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
 
அத்னபடி வரும் 22 ஆம் தேதி சேலம், நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், கடலூர், விழுப்புரம், கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டு ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது.