தொடர்புடைய செய்திகள்
- பாஜக நம்ப வைத்து ஏமாற்றிவிட்டது.. ஆதரவாளர்களிடம் புலம்பினாரா ஓபிஎஸ்?
- ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் உண்மையிலேயே போட்டியிடுகிறாரா? கடைசி நேரத்தில் ஒரு ட்விஸ்ட்?
- ஓபிஎஸ் பேசி கொண்டிருந்தபோது பாதியில் நிறுத்த சொன்ன பாஜக நிர்வாகி: சேலத்தில் பரபரப்பு..!
- தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு..! இரு தரப்புக்கும் பொது சின்னங்கள் வழங்க கோரிக்கை..!!
- பாஜக கூட்டணியில் அமமுக-ஓபிஎஸ்-க்கு எத்தனை தொகுதிகள்? விடிய விடிய பேச்சுவார்த்தை..!
ராமநாதபுரம் தொகுதியில் இன்னொரு சுயேட்சை ஓபிஎஸ்.. வாக்காளர்கள் குழப்பமடைய வாய்ப்பு..!
ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பதும் அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் அதே ராமநாதபுரம் தொகுதியில் இன்னொரு ஓ பன்னீர்செல்வம் என்ற பெயரில் ஒருவர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இருவரும் ஒரே பெயரில் ஒரே இனிஷியலில் இருப்பதால் வாக்காளர்கள் குழப்பம் அடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ராமநாதபுரம் தொகுதியில் பாஜக சார்பில் ஓ பன்னீர்செல்வம் போட்டியிடும் நிலையில் அதே தொகுதியில் உசிலம்பட்டி மேக்கிழார்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த ஓ பன்னீர் செல்வம் என்பவர் சுயேட்சையாக போட்டியிட இன்று மனு தாக்கல் செய்து உள்ளார்
ஒரே பெயரில் இரண்டு ஒரே இனிஷியலில் ஒரே ஒரே தொகுதிகள் 2 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் சின்னத்தை வைத்து மட்டுமே வாக்காளர்கள் வேறுபடுத்தி பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பு இது குறித்து கூறிய போது இது திமுகவின் சதி என்று வழக்கம்போல் குற்றம் சாட்டி வருகின்றனர்.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
