1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (13:01 IST)

ஃபோர்டு செயல்பட வேண்டும்: ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கோரிக்கை!

மறைமலை நகரில் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து செயல்பட முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை. 

 
சென்னை மறைமலைநகர் பகுதியில் பிரபல கார் நிறுவனமான ஃபோர்டின் ஆலை பல காலமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அங்கிருந்து ஃபோர்டு நிறுவனம் வெளியேற உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பணி புரியும் 4 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒருவாரமாக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 
 
இதனிடையே  ஃபோர்டு கார் நிறுவனம் வெளியேறுவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில்  தொழில்துறை அமைச்சர் தங்க தென்னரசு மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.மு.க.ஸ்டாலின்  ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 
 
இந்நிலையில் மறைமலை நகரில் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து செயல்பட முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.