ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 20 அக்டோபர் 2022 (11:45 IST)

பழனிச்சாமி இதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத்தயார்: ஓபிஎஸ் சவால்

OPS
முதலமைச்சர் முக ஸ்டாலினை ஓபிஎஸ் தனிமையில் சந்தித்தார் என்றும் இந்த சந்திப்பு அரை மணி நேரம் நடந்ததாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார், இந்த நிலையில் தான் முதல்வரைச் சந்தித்ததை பழனிச்சாமி நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலக தயார் என ஓ பன்னீர்செல்வம் சவால் விட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஓபிஎச், ஈபிஎஸ் அணிகள் என இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் கூடிய சட்டமன்றத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் வெளியிடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் கட்சிக்கு துரோகம் செய்கிறார் என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலினை தனிமையில் சந்தித்து அரை மணி நேரம் அவர் பேசியுள்ளார் என்றும் கூறியிருந்தார் 
 
இந்த குற்றச்சாட்டுக்கு ஓபிஎஸ் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார். நான் முதல்வர் ஸ்டாலினுடன் பேசியதை பழனிச்சாமி நிரூபிக்க தயாரா? என சவால் விட்டார். மேலும் இதை பழனிச்சாமி நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என்றும் தனது ஆதரவாளர்கள் மத்தியில் சவால் விட்டுள்ளார்
 
இந்த சவாலை ஏற்று எடப்பாடி பழனிச்சாமி அவர் கூறியதை நிரூபிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran