ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 19 அக்டோபர் 2022 (10:27 IST)

தனியாக சந்தித்து பேசிய ஸ்டாலின் – ஓபிஎஸ்? – எடப்பாடியார் குற்றச்சாட்டு!

தமிழ்நாடு சட்டசபையில் ஓபிஎஸ்க்கு இடம் அளிக்கப்பட்டது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, முதல்வர் அதிமுகவிற்கு எதிராக சதி செய்வதாக கூறியுள்ளார்.

அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டு, அவரது எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி இனி செல்லாது என கடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை ஓபிஎஸ்க்கு ஒதுக்கப்பட்டது.

சபாநாயகரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர். ஆனால் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.


இதுகுறித்து பேசியுள்ள எடப்பாடி பழனிசாமி “நேற்று சட்டமன்றம் முடிந்த பிறகு முதல்வர் ஸ்டாலினும், ஓ.பன்னீர்செல்வமும் அரை மணி நேரம் பேசியுள்ளனர். அதிமுக கட்சி முடிவுகள் மற்றும் பொருப்பாளர்கள் பட்டியல் சபாநாயகருக்கு வழங்கப்பட்டிருந்த போதும் அதை மீறி ஓபிஎஸ்க்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுகவை ஒழிக்க முதல்வர் செய்யும் முயற்சிகள் பலிக்காது” என்று கூறியுள்ளார்.

Edited By: Prasanth.K