தொடர்புடைய செய்திகள்
- ''திமுக எதிரி; பழனிசாமி துரோகி''...ஓபிஎஸ் - டிடிவி.தினகரன் இணைந்து செயல்பட முடிவு
- அடுத்தடுத்த வாய்ப்புகள் காத்திருக்கிறது: தோல்வி அடைந்த மாணவர்களுக்கு டிடிவி தினகரன் ஆறுதல்..!
- போக்குவரத்துறையின் நிர்வாக குளறுபடியால் பயணிகள் திண்டாட்டம்: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு..!
- போடாத 16 ரோடுகளுக்கு ரூ.1.98 கோடி பணப்பட்டுவாடா: டிடிவி தினகரன் அதிர்ச்சி தகவல்..!
- மால்களில் டாஸ்மாக் கடைகள் அதிமுக ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டன: செந்தில் பாலாஜி
ஒரே அணியாக செயல்படுவோம்: கூட்டாக பேட்டியளித்த ஓபிஎஸ்-டிடிவி தினகரன்..!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுக பல பிரிவுகளாக பிரிந்த நிலையில் தற்போது ஓபிஎஸ் அணி மற்றும் டிடிவி தினகரனின் அமமுக ஆகிய இரண்டு அணிகளும் இணைந்து செயல்பட முடிவு செய்திருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்த ஓபிஎஸ் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருவரும் இனி இணைந்து செயல்பட இருப்பதாக தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பின்போது லட்சியத்தை அடைய இரு இயக்கங்களும் சேர்ந்து பணிபுரிய முடிவு செய்திருப்பதாகவும் இருவரும் இணைந்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கட்டிக் காத்த அதிமுகவை மீட்போம் என்றும் தெரிவித்தார்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
