தொடர்புடைய செய்திகள்
- எம்.ஜி.ஆர் சிலையில் காவி துண்டு: மதுரையில் பரபரப்பு!
- அதிமுக ஆலோசனை கூட்டம்: எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு
- அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாகனம் மீது தாக்குதல்!
- பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக ஆலோசனை கூட்டம்: ஓபிஎஸ் அறிவிப்பு
- அதிமுகவின் கொடிக்கம்பம் சாய்ந்து ஒருவர் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்
ஓபிஎஸ் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தள்ளுபடி: பெரும் பரபரப்பு!
அதிமுக தற்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு பிரிவுகளாக இருக்கும் நிலையில் இரண்டு பிரிவுகளிலும் இருக்கும் ஆதரவாளர்கள் அவ்வப்போது மோதிக் கொள்ளும் காட்சிகளை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் அடுத்தடுத்து அதிமுகவின் ஆலோசனை கூட்டத்தை கூட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் இன்று சென்னையில் பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அணியில் மாவட்ட செயலாளர்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது. பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களான மாவட்ட செயலாளர்கள் தலைமை நிர்வாகிகள் மட்டுமே மண்டபத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தொண்டர்களுடன் ஓபிஎஸ் வந்தபோது திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக சில நிமிடங்கள் அங்கு பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இன்றைய ஆலோசனைக் கூட்டம் அமைதியாக நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Edited by Mahendran
