தொடர்புடைய செய்திகள்
- காகித ஆலை நிறுவனத்தின் முன்பு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை கண்டன ஆர்ப்பாட்டம்
- ஈரோடு கிழக்கில் வெற்றி உறுதி: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
- "சேர எடுத்துட்டு வாடா.. டேய்!" - ஆவேசமாக கல்லை வீசிய அமைச்சர் நாசர்!
- இபிஎஸ் - ஓபிஎஸ் போல வாழாமல் சுயமரியாதையோட வாழுங்கள்: மணமக்களை வாழ்த்திய அமைச்சர் உதயநிதி
- பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்? மத்திய அமைச்சர் தகவல்
பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம்! அமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள 500 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒரு லட்சம் மானியம் வழங்கப்படும் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் வாரியத்தில் பதிவு செய்த 500 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு ரூபாய் ஒரு லட்சம் மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்த திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு ஆலோசனை குழுவால் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
500 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்ற அமைச்சரின் அறிவிப்பு பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
