தொடர்புடைய செய்திகள்
- பாகிஸ்தான் டிஷர்ட் அணிந்து வந்து சப்போர்ட் செய்த சென்னை ரசிகர்கள்… நெகிழ்ந்த பாகிஸ்தானியர்!
- “இந்த தோல்வி வலியைக் கொடுக்கிறது…” பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்!
- தாயாரின் சிகிச்சைக்காக சென்னையில் குடியேறும் அமீர்கான்?
- சென்னையில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான் - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு
- ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டண வசூல் புகார்: அதிரடி சோதனை..!
இன்று முதல் ஆம்னி பேருந்து இயங்காது... சென்னை திரும்பும் பொதுமக்களுக்கு சிக்கல்..!
இன்று முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ள நிலையில் இன்று மாலை சென்னை திரும்பும் பொது மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிக்குச் சென்ற பொதுமக்கள் இன்றும் மாலை முதல் சென்னை திரும்ப உள்ளனர்.
இந்த நிலையில் இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென்மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதிக கட்டண வசூல் என கூறி 120 பேருந்துகளை சிறைபிடிக்கப்பட்ட நிலையில் அந்த பேருந்துகளை விடுவிக்க வேண்டும் என்றார் கோரிக்கையை வலியுறுத்தி ஆம்னி பேருந்துகள் இன்று முதல் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது
இதனால் ஏற்கனவே ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்கள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.
Edited by Siva
