1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 16 அக்டோபர் 2020 (10:57 IST)

சொதப்பிய பயோ மெட்ரிக் முறை – இனி ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு மூலமே விநியோகம்!

நியாய விலைக் கடைகளில் பயோ மெட்ரிக் மூலமாக உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் அதில் பல குழப்பங்கள் உருவாகின.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் என சொல்லப்படும் கைரேகையின் மூலம் உணவுப் பொருட்கள் விநியோகம் சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. ஆனால் ரேகை விழுவதிலும் நெட்வொர்க் கிடைப்பதிலும் பல குழப்பங்கள் ஏற்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில் இப்போது மீண்டும் ஸ்மார்ட் கார்டுகள் மூலமாகவே உணவுப் பொருட்கள் கொடுக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.