1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 21 ஜூன் 2023 (12:33 IST)

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை; சென்னை உயர்நீதிமன்றம்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வேங்கை வயல் என்ற பகுதியில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தமிழகத்தையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில் வேங்கைவயல் விவகாரம் குறித்து விசாரித்து வரும் ஒரு நபர் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் சத்யநாராயணன் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 
 
ஆலோசனைக்கு பின் பேட்டி அளித்த அவர் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டுள்ளதாகவும்  இப்போதைக்கு  சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் கூறினார்.
 
இதனை அடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி தொடர்ந்து விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Mahendran