தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் உச்சம் சென்ற தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் இவ்வளவு உயர்வா?
- ஜனவரி 26ல் கிராம சபை கூட்டம்: தமிழக அரசு அறிவிப்பு!
- அடுத்த 3 மணி நேரத்தில் சென்னையில் மழை: வானிலை ஆய்வு மையம்
- பிக்பாஸ் முகேன் ராவ் நடிக்கும் புதிய படம்: சென்னையில் பூஜை
- புதுவையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை: சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை அறிக்கை
தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்ன தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வரும் நிலையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
