1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (16:59 IST)

ஜே.இ.இ தேர்வு எழுதாமலேயே ஐஐடியில் மாணவர்களை சேர்க்க புதியதிட்டம்

Chennai IIT
ஜே.இ.இ தேர்வு எழுதாமலேயே ஐஐடியில்  மாணவர்களை சேர்க்கும் திட்டத்தின் கீழ் பிஎஸ்சி பட்டப்படிப்பு தொடங்க வழிகை செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பலரும் வரவேற்கு அளித்துள்ளனர்.

கிராமப்புற,பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோரும் ஜே.இ.இ தேர்வு எழுதாமலேயே ஐஐடியில் சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சென்னை, கோவைபோன்ற தமிழ் நாட்டின் முக்கிய நரங்கள் முதல் சிறு நகரங்கள் கிராமங்கள் வரை பல்வேறு இடங்களைச் சேர்ந்தவர்களும், பல்வேறு பொருளாதார பின்னணி கொண்ட மாணவர்களும் இந்தப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பின் தங்கியுள்ள மாணவர்களுக்கு கல்விக் கட்டண சலுகை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. எனவே 80க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 100 சதவீத கல்வி உதவித்தோகை வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.