1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. narendra modi coming to tamilnadu again

மீண்டும் தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் மோடி!.. பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு!...

narendra modi
தமிழகத்தில் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதிமுக இந்த முறை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்திருக்கிறது. இந்த முறை எப்படியாவது திமுகவை வீழ்த்திவிட்டு அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என பாஜக நினைக்கிறது..

இதையடுத்து தமிழக பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து வர துவங்கியிருக்கிறார். ஏற்கனவே கடந்த மாதம் 23ஆம் தேதி சென்னைக்கு அடுத்துள்ள மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதில், எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அப்போது பிரதமர் மோடி திமுகவை மிகவும் கடுமையாக விமர்சித்து பேசினார்.. தமிழ்நாட்டில் ஒரு டபுள் இன்ஜின் ஆட்சி அமைப்போம் என்றும் கூறியிருந்தார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் ‘அது டபுள் இன்ஜின் இல்..லை டப்பா இன்ஜின்’ என்று நக்கலடிடித்தார். இந்நிலையில்தான், பிரதமர் நரேந்திர மோடி வருகிற 28ம் தேதி சனிக்கிழமை மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயகியின் கூட்டணி தொடர்பான பொதுக்கூட்டத்தில் பங்கேற்கேவுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கிறது..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
காகங்கள் இறப்பு!.. சென்னையில் பரவும் H5N1 வைரஸ்!. பறவைக் காய்ச்சல் பரவுமா?!..