1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 14 நவம்பர் 2018 (11:05 IST)

ரஜினி உடம்புல எப்பேற்பட்ட ரத்தம் ஓடுது? ரஜினியை விளாசிய நாஞ்சில் சம்பத்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தனக்கு தெரியாது என கூறிய ரஜினியை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் நாஞ்சில் சம்பத்.
ரஜினிகாந்திடம் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து உங்கள் கருத்து என்ன என கேட்கப்பட்டதற்கு, எந்த ஏழு பேர் என எதிர்கேள்வி கேட்டார். பின்னர் ராஜிவ் கொலை வழக்கு என தெளியபடுத்தப்பட்ட பின்னர் எனக்கு தெரியலைங்க, நான் இப்பத்தான் வருகிறேன் என மழுப்பல் பதில் அளித்தார். 
 
இதனை சமாளிக்க நேற்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, செய்தியாளர் என்னிடம் ஒழுங்காக கேள்வியே கேட்கவில்லை. தெளிவாக கேள்வி கேட்டிருந்தால் நான் பதில் கூறியிருப்பேன் என பதிலளித்தார். மேலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரில் விடுதலை குறித்து தெரியாத அளவிற்கு இந்த ரஜினிகாந்த முட்டாள் இல்லை என வீரவசனம் பேசினார். 
 
இதனையடுத்து பாஜகவுடன் கூட்டணி குறித்து பல சூட்சும கருத்துக்களை தெரிவித்தார் ரஜினி. ரஜினியின் இந்த கருத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
 
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய நாஞ்சில் சம்பத், யார் அந்த 7 பேர் என்று கேட்கும் ரஜினிகாந்தின் உடம்பில் எப்பேற்பட்ட ரத்தம் ஓடுகிறது என தெரியவில்லை. 27 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை கொச்சை படுத்தும் விதமாக பேசியிருக்கிறார் ரஜினி. மக்களிடம் இருந்து கோடி கோடியாய் சம்பாதித்துவிட்டு மக்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காமல் பேசியிருக்கும் ரஜினிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என நாஞ்சில் சம்பத் காட்டமாக பேசினார்.