1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Mumbai corona centre complete their first year

கொரோனா வார்டு திறந்து ஓராண்டு நிறைவு! – கூட்டமாக டான்ஸ் ஆடிய முன்கள பணியாளர்கள்!

National
இந்தியாவில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக கொரோனா வார்டுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மும்பையில் கொரோனா வார்டு அமைக்கப்பட்ட முதல் ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு முதலாக சுமார் ஒன்றரை ஆண்டு காலத்திற்கும் மேலாக கொரோனா பரவல் இருந்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கி வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் கடந்த ஆண்டு முதலாகவே பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சைக்காக சிறப்பு வார்டுகள், சிகிச்சை மையங்கள் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டன.

அவ்வாறாக மும்பையில் கடந்த ஆண்டில் தொடங்கப்பட்ட கொரோனா சிறப்பு வார்டு தனது முதலாவது ஆண்டை நிறைவு செய்துள்ளது. கொரேகானில் அமைந்துள்ள அந்த வார்டில் இதுவரை 21 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. முதலாவது ஆண்டு நிறைவை அங்குள்ள முன்கள பணியாளர்கள் டான்ஸ் ஆடி கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விவகாரம்: இன்று மாலை அமைச்சர் முக்கிய ஆலோசனை